xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா: Anubhavam

Thursday, December 02, 2004

Anubhavam

அனுபவம்

மொட்டைப்பாறைக்குக் கீழ்
சுழித்தோடும் தாமிரபரணி.
தாவித்துழவத் துறுதுறுக்கும் மனம்.

"இங்கேதானே ஏழாம் வயதில்
இழுப்பில் தவங்கினாய்?"
பட்டறிவு போதகம்.

கர்ப்பிணி மனைவி
கட்டாமல் விட்ட ஆயுட்காப்பீட்டு சந்தா..
...............
என்றேனும் ஒருநாள்
என் அசட்டுத்தைரியம் மீண்டும் ஜெயிக்கும்.

No comments: