அனுபவம்
மொட்டைப்பாறைக்குக் கீழ்
சுழித்தோடும் தாமிரபரணி.
தாவித்துழவத் துறுதுறுக்கும் மனம்.
"இங்கேதானே ஏழாம் வயதில்
இழுப்பில் தவங்கினாய்?"
பட்டறிவு போதகம்.
கர்ப்பிணி மனைவி
கட்டாமல் விட்ட ஆயுட்காப்பீட்டு சந்தா..
...............
என்றேனும் ஒருநாள்
என் அசட்டுத்தைரியம் மீண்டும் ஜெயிக்கும்.
No comments:
Post a Comment